அறிந்த கதை
சித்திரை மாதம் நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எழிலன், அக்கம் பக்கத்தினரின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். அவனைப் போலவே திடுக்கிட்டு எழுந்த அவள் தாய் வள்ளியும் கலவரத்தோடு மகனைப் பார்க்க அலறல் சத்தத்தின் வீரியம் அதிகமானது எழிலனின் செவிகளில். சற்றுப் பதட்டத்தோடு கதவை திறந்தவன் கண்ணெதிரே எதிர் வீட்டு மாடசாமியின் குடிசையை ஏணியாக்கி விண்ணை முட்ட முயற்சி செய்யும் நெருப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். மாடசாமி வீடு மட்டுமல்லாது, அடுத்தடுத்து இருந்த அத்தனை குடிசை வீடுகளும் நெருப்பின் பசியாற்றிக் கொண்டிருந்தன. ஊர்கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைக்க ஆண்களும் சில பெண்களும் ஈடுபட்டிருக்க, இன்னும் சில பெண்கள் மண்ணை வாரி கூரையில் வீசி தீயை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்க இன்னும் சிலரோ, தங்கள் குழந்தைகளையும், தங்களின் சேமிப்பையும் நெருப்பிடம் இருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சிமெண்...