இடுகைகள்

டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல்

                 பழைய மகாபலிபுர சாலையில் காலைப் போக்குவரத்து நெரிசல்களுக்கிடையே ஊர்ந்தும், தவழ்ந்தும் வந்து கொண்டிருந்த அந்த தனியார் பேருந்து சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பிரபலமான தொழில்நுட்ப  பூங்காவில் நின்றது. ஆங்காங்கே நின்று கொண்டிருந்த அலங்கார நிழற்குடைகள் எல்லாம் அதுவரை வெறிச்சோடிக் கிடந்தன. பேருந்து வந்து நின்ற அடுத்த நொடியில் காலை சூரியனைக் காணும் ஆவலோடு புறாக்கள் கூட்டம் ஒன்று அந்த வெற்றிடங்களை நிரப்பி நின்றன. அழகுக்காக வைக்கப்பட்ட அலங்காரச் செடிகளை தழுவிக் கொண்டிருந்த தென்றலும், பேருந்து நின்ற திசையில் தன் கவனத்தை செலுத்தியது. அவற்றோடு சேர்த்து அங்கே பணிபுரியும் சில ஊழியர்களும் ஆவலோடு பேருந்தை நோக்க, அதே தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவராய் இறங்க ஆரம்பித்தனர். அதில்தான் இறங்கினாள், அத்தனை பேரின் ஆவலுக்கும் சொந்தக்காரியான மதிவதனி.  கருத்த தேகம், களையான முகம், அடுக்கி வச்ச பல்வரிசை, இதழ்களின் புன்னகை கண்டு வெட்கப்படும் கன்னக்குழி, கழுத்தோடு பிணைந்து தன் அழகை கூட்டிக் கொண்ட மெல்...