இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்தினி

“தட தட” வென தொடர்வண்டி சத்தம் அப்போதுதான் நந்தினியின் செவிகளைத் தாண்டி மூளைக்கு எட்டியது. உறக்கம் கலைந்தவள் சூரிய வெளிச்சம் எட்டிப்பார்ப்பதை உணர்ந்து அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தால், மணி 7.05 என்று காட்டியது. தன் மேலே இருந்த போர்வையை விலக்கிவிட்டு சோம்பல் முறிக்க முயற்சித்தவளுக்கு தடையாய் தொடர்வண்டியின் மேற்கூரை தட்டியது. சற்று கீழே எட்டிப்பார்த்தாள். அவள் தந்தை மாடசாமி அன்னை முத்தம்மாளுடன் சன்னோரத்தில் நகரும் வயல்வெளியைக் காட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். தூரத்தில் எங்கோ “பருத்திப்பால் பருத்திப்பால்.... சூடான பருத்திப்பால்” என்ற சத்தம் கேட்டது. அந்தக் குரல் தன்னுடைய படுக்கைக்கு அருகே வருவதை உணர்ந்த நந்தினி “அப்பா இன்னும் எவ்ளோ நேரம் இருக்குப்பா திருநெல்வேலி போய்ச் சேர?”என்று ஆவலோடு கேட்டாள்.  “இன்னும் அரைமணி நேரத்தில் போய்டலாம்மா. நீ தேநீர் எதுவும் குடிக்கிறாயா?” என்று மாடசாமி கேட்க உடனே “பருத்திப்பால் சாப்டுறேன்பா” என்று புன்னகையோடு பதிலளித்தாள். மாடசாமியும் சிரித்துக் கொண்டே “சரி கீழ இறங்கி வா” என்றார்.                   ...